திருகோணமலை கடலில் சந்தேத்துக்கிடமான பொதிகள் கண்டெடுக்கப்பட்டன!

breaking
திருகோணமலை கடலில் மிதந்து கொண்டிருந்த சந்தேகத்துக்கிடமான மூன்று பொதிகளை மீனவர்கள் கண்டெடுத்து கடற்படையிடம் ஒப்படைத்துள்ளனர். இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட பொதிகளில் ஐஸ் வகை போதைப் பொருள் என சந்தேகிக்கப்படும் 3 கிலோ 172 கிராம் அடங்கிய போதைப் பொருள் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தங்கல்ல குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்திற்கு வருகை தந்த படகில் இருந்த மீனவர்களே திருகோணமலை கடற்பரப்பில் இருந்து 180 கடல்மைல் தொலைவில் இந்த பொதிகளை கண்டெடுத்துள்ளனர். தங்கல்ல பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.