கொரோனா கொடுரத்தால் தாய்வானில் முதலாவது உயிரிழப்பு பதிவு!

breaking
உலகினை அச்சுறுத்தும்  கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தாய்வானில் முதலாவது மரணம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் சீனாவில் இருந்து தாய்வானுக்கு சென்ற 60 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் கொரோன வைரஸ் தொற்று தொடர்பாக மேலும் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தாய்வானில் மட்டும் தற்போது 20 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.