தமிழீழ விடுதலை புலிகளுக்கு பல சமா்களில் வெற்றிக்கு உதவிய படகு காட்சி பொருளாக வைக்கப்பட்டது..!

breaking
தமிழீழ விடுதலை புலிகள் தயாாித்து, பல வெற்றி சமா்களில் பயன்படுத்தப்பட்ட படகு கோட்டபாய கடற்படைமுகாமல் காட்சி பொருளாக வைக்கப்பட்டது..! தமிழர்களின் ஏகபிரதிநிதிகளான தமிழீழ விடுதலை புலிகளினால் தயாாிக்கப்பட்டு, அவா்களுடைய சிறப்பு தாக்குதல் நடவடிக்கைகளு க்கு பயன்படுத்தப்பட்ட படகு ஒன்று  பேரினவாத  கடற்படை முகாமில் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. 2000ஆம் ஆண்டு  மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை உள்ளிட்ட பல வெற்றி தாக்குதல்களில் கடற்புலிகளின் முக்கிய பயன்பாட்டில் இருந்த ஒரு படகே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது மேலும் யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள நிலை யில் பேரினவாத கடற்படையினாரால் கைப்பற்றப்பட்ட படகு ஒன்று வட்டுவாகல் கோட்டபாய கடற்படை முகாமில் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.