உலக அரசியலில் ஈழத்தமிழர்கள் : வினாக்களிற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தெளிவான பதில்கள்
உலக அரசியல் ஈழத் தமிழர்களினால் எப்படி கையாளப்பட வேண்டும் என்பதை உதாரணங்களுடன் விளக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்..
கே: - வல்லரசுகளைப் பகைத்துக் கொண்டு எப்படி இதனை முன்கொண்டு செல்வது?
ப: - ரணில் மற்றும் - சிறிசேனவை வைத்து ராஜபக் ஷ ஆட்சியை வீழ்த்தியுள்ளோம். நாளைக்கு அவர்கள் திரும்பி வரலாம். ராஜபக்சாக்கள் திரும்பி வந்தால் இந்த இலங்கை விடயத்தை சர்வதேச அரங்கில் உயிருடன் வைத்திருக்கவேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் வைத்திருப்பதற்கு விரும்பினார்கள். அதில் ஒரு பிரயோசனமும் இல்லை என்பதால் அங்கு வைத்திருக்க விரும்பினார்கள். சர்வதேச அரங்கில் வைத்திருப்பதில் பிரச்சினையில்லை. அதை எந்த இடத்தில் வைத்திருக்கவேண்டும் என்பதை நாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தரப்பாகிய நாங்கள் இலங்கை விடயத்தை பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அழுத்தம் கொடுத்திருந்தால் வேறு வழியில்லாமல் கொண்டு சென்றிருப்பார்கள். இன்னொரு வழியும் இருக்கின்றது. மியன்மாரும் இலங்கை போன்று ரோம் பிரகடனத்தில் கையெழுத்திடவில்லை. ரோம் பிரகடனத்தில் கையெழுத்திடாவிட்டால் நேரடியாக சர்வதேச நீதிமன்றுக்குச் செல்ல முடியாது.
ஆனாலும் மியன்மார் விடயத்தில் புதிய அணுகுமுறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மியன்மாரில் ரோஹிங்ய மக்கள் திட்டமிட்டு இனஅழிப்புச் செய்யப்படும்போது பலர் தப்பி வேறு நாடுகளுக்கு அகதிகளாகச் செல்கின்றனர். இவ்வாறு அகதிகளாகச் செல்லும் மக்களைப் பல நாடுகள் ஏற்றுக் கொள்கின்றன. அவர்களின் புகலிடக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்கின்றன.
இவ்வாறு ரோஹிங்ய மக்களை ஏற்றுக் கொள்ளும் நாடு ரோம் பிரகட னத்தில் கையெழுத்திட்டிருந்தால், சர்வதேச நீதிமன்றம் அந்த நாடு ஊடாக மியன்மாருக்கு எதிரான விசாரணையைத் தொடக்கலாம். எங்கள் தமிழ் மக்கள் ரோம் பிரகடனத்தில் கையெழுத்திட்ட எத்த னையோ நாடுகளுக்குச் சென்றிருக்கின்றார்கள். போய் அங்கு தஞ்சக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். இங்கு நடக்கின்ற அநியாயங்களை முன்னிறுத்தித்தான் தஞ்சக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். அந்த நாடுகளும் அதனை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு புகலிடம் வழங்கியுள்ளன.
பாதுகாப்புச் சபை, வீட்டோ அதிகாரம் என்பவற்றைத் தாண்டி சர்வதேச குற்றவியல் நீதி மன்றுக்குச் செல்லும் வழியை மியன்மார் இன்று காட்டியிருக்கின்றது. சட்டத்தரணி என்று பெயரை வைத்துக் கொண்டு தத்துவம் பேசுகின்ற கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்தி ரனுக்கு இந்த அறிவு வரவில்லையா? இந்த விளக்கம் அவருக்குத் தெரியாதா?
2,கே: - மக்கள் தஞ்சமடைந்துள்ள நாடுகள்தானே சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல வேண்டும்?
ப: இல்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நேரடியாக விசாரணைகளை ஆரம்பிக்கின்றது.
3,
கே: - அப்படியானால் தமிழ் மக்கள் எவ்வளவோ காலமாக, ரோம் பிரகடனத்தில் கையெழுத்திட்ட நாடுகளில் தஞ்சமடைந்தும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏன் விசாரணையை ஆரம்பிக்கவில்லை?
ப: - சர்வதேச குற்றவியல் நீதிமன்றிலும் அரசியல் இருக்கலாம். எந்தவொரு இடத்திலும் நீங்கள் ஒரு கருத்துருவாக்கத்தைச் செய்யவேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் அதனைக் கேட்கவேண்டும். அப்பொழுது சர்வதேச சமூகம் வேறுவழியின்றி இதனை முன்னெடுக்கும். மியன்மார் தொடர்பில், ஹேக்கில் உள்ள ஐ சி ஜே யில் ஆபி ரிக்க நாடு ஒன்று வழக்குத் தாக்கல் செய்தது. ஒரு நாடு மியன்மாருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தது. ஐ சி ஜேயில் ஒரு நாடுதான் வழக்குத் தாக்கல் செய்யமுடியும். முழு விசாரணை நடைபெற்று, மியன்மார் அரசு இந்தக் கோணத்தில்தான் நடந்து கொள்ளவேண்டும் என்று இடைக்காலக் கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலை நடப்பதை விசாரிக்கவேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டு அந்த இனப்படுகொலையை தவிர்த்துக் கொள்வதற்காக இந்தவிடயங்களை நீங்கள் செய்யவேண்டும் என்று இடைக்காலக் கட்டளையைப் பிறப்பித் துள்ளது. எத்தனையோ வழிகள் உள்ளன. அவற்றை ஏன் பிரயோகிக்கத் தயாரில்லை?