சிரியா ஆட்சியின் அட்டூழியங்களுக்கு ரஷ்யா ஆதரவு வழங்குவதை நிறுத்த வேண்டும் -அமெரிக்கா

breaking
சிரியாவில்  அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கும்  கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே  கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும்,  கிளர்ச்சிப் படைகளுக்கு அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகளும் ஆதரவு அளித்து வருகின்றன.
சிரியா உள்நாட்டுப் போரில் கடந்த 4 மாதங்களில் 1,000 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், சிரியாவின் இட்லிப் நகரில்  இடம்பெற்று வரும் வன்முறை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார்.மேலும், டிரம்ப் - துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனுடனான தொலைபேசி உரையாடலில்  ஆசாத் ஆட்சியின் அட்டூழியங்களுக்கு ரஷ்யாவின் ஆதரவை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் விருப்பத்தை தெரிவித்தார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி பஷர் அல்-ஆசாத்தின் படைகள் ஞாயிற்றுக்கிழமை வடமேற்கு பிராந்தியமான இட்லிப்பில் கிளர்ச்சிப் படைக்கு எதிராக நடந்த இறுதிக்கட்ட தாக்குதலில் வெற்றிகளைப் பெற்றன. மேலும். இட்லிப் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது என அல்-ஆசாத் படைகள் தெரிவித்துள்ளது