22 இல் இருந்து 10க்கு மாற்ற பேரினவாத சக்திகள் முயற்சி: அமீர் அலி குற்றச்சாட்டு

breaking
  இருபத்திரெண்டாக காணப்படுகின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பத்தாகா குறைப்பதற்கான வேலைத்திட்டங்கள் தேசியத்தில் பேரினவாத சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில், நடைபெறவுள்ள சிறிலங்கா பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் இருபத்திரெண்டு உறுப்பினர்களை பத்தாக குறைத்து பின்னர் அதனை அடுத்த தேர்தலில் ஆறாக மாற்றுவதற்கான வேலைகள் நடைபெறுகின்றன. இந்த சதி குறித்து நாம் தெளிவாக இருந்து கொள்ள வேண்டும். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மொட்டுக் கட்சியில் போட்டியிடும் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றிபெற மாட்டார்கள் என்பதனை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தற்போதைய நிலவரத்தின் படி பொருட்களுக்கான விலைவாசி மற்றும் வாழ்வாதார சிக்கல்கள் காரணமாக கிட்டத்தட்ட ஏழு இலட்சத்திலிருந்து எட்டு இலட்சம் வரையான வாக்குகள் மொட்டுக் கட்சியினர்களுக்கு குறைவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே நாம் எதிர்கொள்ளவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரேயொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரைத்தான் வென்றெடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதில் நாம் அனைவரும் சிந்தித்து செயற்பாட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்