முல்லைத்தீவில் மூன்று பிள்ளைகளின் தாயை காணவில்லை.!

breaking
ஆடைத்தொழிற்சாலைக்கு சென்ற முல்லைத்தீவு மல்லாவியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயை காணவில்லையென அவரது கணவர் பொலிசில் முறையிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பெண் வீட்டிலிருந்து (மல்லாவி) காலை 5.30 மணியளவில் வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு பேருந்தில் சென்றுள்ள நிலையிலேயே காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக ஆடைத்தொழிற்சாலையின் முகாமையாளர் தெரிவிக்கையில் எமது தொழிற்சாலைக்கு காலை 7.30 மணிக்கு எமது பேருந்தில் வருகை தந்து தொழிலினை மேற்கொண்ட பெண் மாலை 5.30 மணியளவில் தொழிலை நிறைவு செய்து எமது பேருந்தில் வீடு திரும்பியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் நாம் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் எமது பேருந்தில் அன்றைய தினம் மாலை 7.30 மணியளவில் மல்லாவி நகரில் இறங்கியுள்ளமை தெரியவருகின்றது எனத் தெரிவித்தார்.