கடலில் நீராடச்சென்ற வயோதிப தாய்க்கு ஏற்பட்டநிலை!

breaking
கடலில் நீராடச் சென்ற வயோதிப தாய் நீரில் மூழ்கி தத்தளித்தநிலையில் துரதமாக செயற்பட்ட கடற்படையினர் அவரை காப்பாற்றியுள்ளனர். திருக்கோவில், சங்கமம் கிராமம் கடற்பரப்பில் நேற்றையதினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடலில் நீராட இறங்கியவேளை அவர் கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டார். இதன்போது, அந்த கடற்பரப்பில் தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் உடனடியாக செயற்பட்டு பெண்ணை உயிருடன் காப்பாற்றியுள்ளனர்.. பின்னர் அவர் சிகிச்சைக்காக திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. 68 வயதுடைய குறித்த பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.