யேமனில் சவுதி கூட்டுப் படை நடத்திய தாக்குதலில் 31 பொதுமக்கள் உயிரிழப்பு!

breaking
யேமனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் சவுதி அரேபிய கூட்டுப் படை நடத்திய விமானத் தாக்குதலில் 31 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெஃப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நிறைந்த பகுதியில் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 19 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை அல்-ஜாஃப் மாகாணத்தில், அரசுப் படையினருக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான டொர்னாடோ ரக போர் விமானத்தை ஹெளதி கிளர்ச்சியாளர்கள் சுட்ட வீழ்த்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுக்கின்றன.