மேலதிக செய்தி- வைத்தியசாலைக்குள் அட்டகாசம் செய்தவர்களில் ஐவர் கைது

breaking
  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து மருத்துவ சேவையாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்களின் கீழ் 5 சந்தேகநபர்களை வரும் மார்ச் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருடன் தொடர்புடையவர்கள் வைத்தியசாலைக்குள் புகுந்து மருத்துவ சேவையாளர்களைத் தாக்கியும் அச்சுறுத்தியும் உள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் முதலில் கைதான நிலையில் மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னைய செய்தி https://www.thaarakam.com/news/114397