இராணுவத்தினரின் அதிகாரங்களை அதிகரித்த கோத்தா

breaking
  சிறிலங்கா இராணுவ வீரர்களை சிங்கள, தமிழ்ப் பிரதேசங்கள் முழுவதும் கடமையில் ஈடுப்படுத்துவதற்கான அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெயிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் நாளை முதல் அமுலுக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது. பொது ஒழுங்குகளை பாதுகாத்தல் எனும் போர்வையில் இராணுவ வீரர்கள் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குவிக்கப்பட உள்ளனர். இது உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து நாட்டில் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.