வவுனியாவில் மீண்டும் தலைதூக்கியுள்ள டெங்கு.!

breaking
வட தமிழீழம் , வவுனியாவில் அண்மைய காலமாக குறைவடைந்திருந்த டெங்கு நுளம்பின் பெருக்கம் மீண்டும் தலைதூக்கியுள்ளதாகவும், கடந்த வாரத்தில் இரு புதிய டெங்கு நுளம்பு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் ஓமந்தை பொது சுகாதாரப்பரிசோதகர் க.சிவரஞ்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரத்தில் ஓமந்தை பகுதியில் புதிய டெங்கு நுளம்பு நோயாளர்கள் இருவர் இணங்காணப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தமது இருப்பிடங்கள், காணிகள், வர்த்தக நிலையங்களை, தண்ணீர்த் தொட்டிகள், மூடிகள், போன்றவை சுத்தப்படுத்தப்பட்டு வாரத்தில் ஒரு நாளில் தமது இருப்பிடங்களை துப்பரவு செய்து வைத்திருக்குமாறும், தமது பகுதிகளை சுகாதாரத்துறையினர் பார்வையிட்டு வருவதாகவும், டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை இணங்கண்டால் அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் எழுத்து மூலமாக அறிவித்தல்களும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஓமந்தை பகுதியில் டெங்கு நுளம்பு பெருகும் மூன்று இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், உரிமையாளருக்கு எதிராக எதிர்வரும் வெள்ளிக்கிழமை சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், ஏனையவர்கள் தமது பகுதிகளை சுத்தமாக துப்பரவு செய்து வைத்திருக்குமாறும் தெரிவித்துள்ளார்.