களனி பல்கலைக்கழகத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள்!

breaking
களனி பல்கலைக்கழக சிசிரிவி விவகாரத்தில் 4 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். களனி பல்கலைக்கழகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி.கமெராக்களை கழற்றிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களை எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த 4 பேரில் பௌத்த பிக்கு மாணவர் ஒருவரும் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. களனி பல்கலைக்கழக சி.சி.ரி.வி கழற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக மாணவர் சங்கத்தின் தலைவர் உட்பட 16 பேர் கிரிபத்கொடை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர். அதில் 12 பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய நான்கு பேரும் மஹர நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டனர். இதன்போதே அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.