அதிவேகம் விபத்தானது

breaking
மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக பயணித்த இளைஞன் ஒருவன் வீதியில் திடீரென்று குறுக்கே சென்ற பெண்ணுக்கு வழி விட்ட போது சைக்கிள் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இன்று  (29.02.2020) இடம்பெற்றுள்ளது.   வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளி வீதியிலே  இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் தலைக்கவசம் அணிந்திருந்ததோடு கையில் மேலதிக தலைக்கவசம் ஒன்றினை கொழுவி வந்த வேளை  வீதிக்கு குறுக்கே பெண்ணுக்கு வழி விடும் போது சைக்கிள் திசைமாறி மின் கம்பத்தில் மோதியதாக விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். குறித்த விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இளைஞன் ஆபத்தான நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.