தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து தீ விபத்து!

breaking
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அம்பாந்தோட்டையிலிருந்து கொழும்புக்குச் சென்ற பஸ் ஒன்று நேற்று மாலை 4.30 மணியளவில் இமாடுவா மற்றும் கோக்மடுவா இடையேயான 110 வது மைல் கல் பகுதியில் திடீரென பற்றிய தீயால் முற்றிலுமாக எரிந்து நாசமானது. அம்பலாந்தோட்டை டிப்போவுக்கு சொந்தமானது இந்த பேருந்து. அத்துடன் இது ஒரு சொகுசு பேருந்து. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மாத்தறை-அம்பாந்தோட்ட அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டபின்னர் இந்த பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. தீ விபத்து ஏற்பட்டவுடன், பின்னதுவ நுழைவாயிலில் உள்ள தீயணைப்பு பிரிவு சம்பவ இடத்திற்குச் சென்றது, ஆனால் பஸ் முற்றிலுமாக எரிந்து நாசமாகிவிட்டது. தீ விபத்தில் பஸ்ஸில் சுமார் இருபது பயணிகள் இருந்தனர், தெய்வாதீனமாக எவரும் காயமடையவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து இமாடுவா காவல்துறை மற்றும் டிப்போ பொறியியல் பிரிவு விசாரணையை நடத்தி வருகின்றன.