ஸ்ரீலங்காவில் மண் சரிவில் ஒருவர் பலி!

breaking
மாத்தளை – மடவல உல்பத பகுதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். நீர் விநியோக திட்டம் ஒன்றுக்காக கால்வாயினை வெட்டி கொண்டிருந்த வேளையே அவர் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பின்னர் அவர் மாத்தளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.