உந்துருளியில் பயணித்த பெண் மீது கடற்படையின் வாகனம் மோதியது

breaking
!கடற்­ப­டை­யி­ன­ரின் வாக­னம் மோதி­ய­தில் மருத்­து­வ­மனை ஊழி­யர் படு­கா­ய­ம­டைந்­தார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. சம்­ப­வம் புதுக்­கு­டி­யி­ருப்பு மருத்­து­வ­ம­னைக்கு முன்­பாக நேற்றுப் பிற்பகல் 2.30 மணியள­வில் இடம்­பெற்­றது. முல்­லைத்­தீவு மாவட்ட மருத்­துவ மனை­யில் பணி­பு­ரி­யும் ஊழி­ய­ரான பெண், பணி­மு­டித்து மோட்­டார் சைக்­கி­ளில் வீடு திரும்­பிக்­கொண்­டி­ ருக்­கும்­போது விபத்து இடம்­பெற்­றது. அவர் புதுக்­கு­டி­யி­ருப்பு மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு மேல­திக சிசிச்­சைக் காக மாவட்ட மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டார். புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச வீதிப்­போக்­கு­வ­ரத்­துப் காவல்துறையினர் விசா­ரணை நடத்­தி­னர்.