!கடற்படையினரின் வாகனம் மோதியதில் மருத்துவமனை ஊழியர் படுகாயமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. சம்பவம் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு முன்பாக நேற்றுப் பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் பணிபுரியும் ஊழியரான பெண், பணிமுடித்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டி ருக்கும்போது விபத்து இடம்பெற்றது.
அவர் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிசிச்சைக் காக மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். புதுக்குடியிருப்பு பிரதேச வீதிப்போக்குவரத்துப் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.