முள்ளிவாய்க்கால் நினைவுதினமான இன்று, மதியம் வரை வடக்கில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருக்கும். மதியத்துக்குப் பின்னரே அவை திறக்கப்படும் என்று சங்கப்பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந் தல் வடக்கு , கிழக்கில் இன்று உணர்வுபூர்வமாக இடம்பெறுகிறது. அதற்காக வர்த்தக நிலையங்களை மதியம் வரை மூடி அஞ்சலி செலுத்துமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் அழைப்பு விடுத்திருந்தார். இன்றைய தினமான மே 18 தினத்தை துக்கதினமாக வடக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றி அறிவித்துள்ளது.
இந்த நிலையில் வடக்கில் வர்த்தக நிலையங்கள் மதியம் வரை மூடப்பட்டிருக்கும். மதியத்துக்குப் பின்னரே திறக்கப்படும் என்று சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். வவுனியாவில் மதியத்துக்குப் பின்னரே வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் வர்த்தகர் சங்கம் தெரிவித்தது. மதியம் 12 மணிவரை சகல வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு சகல வர்த்தகர்களையும் சங்கம் கேட்டுள்ளது.