பத்து வயது பாலகனின் காலில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கொடிய தந்தை!

breaking
  வட தமிழீழம், ஊறனியில் 10 வய­துச் சிறு­வ­ன் இரண்டு கால்­க­ளி­லும் எரி­கா­யங்­க­ளு­டன் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். அவ­ரது வளர்ப்­புத் தந்­தையே சிறு­வ­னைக் கட்டி வைத்து காலில் மண்­ணெண்­ணெய் ஊற்­றித் தீ வைத்­தார் என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது. சிறு­வர் உரி­மையை மீறும் வகை­யி­லான இந்த மோச­மான சம்­ப­வம் வல்­வெட்­டித்­துறை ஊற­ணி­யில் இடம்­பெற்­றது. குறித்த சிறு­வ­னின் தந்தை உயி­ரி­ழந்­து­ விட்­டார். தற்­போது சிறிய தந்­தை­யார் என்று சிறு­வன் ஒரு­வரை அடை­யா­ளப் படுத்­திக்­கூறி அவரே தனது காலைக் கட்­டி­வைத்து மண்­ணெண்­ணெய் ஊற்றி கால்­க­ளில் தீ மூட்­டி­னார் என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது. இது பற்­றிய விட­யங்­கள் விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது. சிறு­வன் பணம் எடுத்­த­தால் தந்­தை­யார் என்று கூறப்­ப­டும் நபர் இவ்­வாறு துன்­பு­றுத்­தி­னார் என்­றும்இ வெளியே யாருக்­கா­வது கூற­வேண்­டாம் என்று அச்­சு­றுத்­தி­யி­ருந்­தார் என்­றும் விசா­ர­ணை­யில் கூறப்­பட்­டுள்­ளது. குறித்த சிறு­வன் தீ வைத்த தினத்­தி­லி­ருந்து நான்கு நாள்­கள்­வரை மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­ப­ட­வில்லை. வீட்­டில் வைத்து சிகிச்சை வழங்­கப்­பட்­டுள்­ளது. எனி­னும் தீ சுட்ட இடம் காய­மாகி மோச­மான நிலைக்­குச் சென்­ற­போதே ஊறணி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார். மேல­திக சிகிச்­சைக்­காக அவர் பருத்­தித்­துறை ஆதார மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டார். அங்கு மருத்­து­ம­னைப் காவல்துறையினரின்செயற்­றி­றன் குறை­வா­கக் காணப்­பட்­ட­தால் மேல­திக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை என்று காவல்துறையினர்மீது குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது. அது தொடர்­பில் சிறு­வர் விட­யங்­க­ளைக் கையா­ழும் திணைக்­கள அதி­கா­ரிக்­கும் காங்­கே­சன்­துறை பிரிவு இரண்­டின் உத­விப் கால்துறை அத்­தி­யட்­ச­கர் டி.கே. பிரி­யந்­த­வுக்­கும் அறி­விக்­கப்­பட்­டது. அவ­ரது வழிப்­ப­டுத்­த­லில் பருத்­தித்­து­றைப் காவல்துறையின் பொறுப்­ப­தி­காரி மருத்­து­வ­ம­னைக்­குச் சென்று விசா­ரணை நடத்­தி­னார். வல்­வெட்­டித்­து­றைப் கால்துறையின் சந்­தே­க­ந­ப­ரைக் கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ள­னர் என்று உத­விப் காவல்தறை அத்­தி­யட்­ச­கர் தெரி­வித்­தார்.