சென்னை, மதுரை உட்பட தமிழகத்தில் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கம்

breaking
கரோனா வைரஸுக்கு இந்தியாவில் சுமார் 380 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஞாயிறன்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு நேற்று ஊரடங்கை காலை 5 மணி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இதனையடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'மக்களின் நலன் கருதி ஊரடங்கு நிகழ்வு 23-ந்தேதி காலை 5 மணி வரை தொடரும்' கூறப்பட்டிருந்தது. இதன்படி இன்று காலை 5 மணி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அதிகாலை 5 மணிக்குப் பிறகு, சென்னை, மதுரை உள்பட தமிழகத்தில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. எனினும், வழக்கம் போல் இல்லாமல் தேவைக்கேற்ப குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட நகரங்களில் டீக்கடைகள், பெட்டிக்கடைகள் திறந்துள்ளன.