கொரோனா : இந்தியாவில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!!

breaking
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் கொரோனா வைரசுக்கு பலியாகியுள்ளதையடுத்து, இந்தியாவில் கொரோனோவுக்கு இரையாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. உலக நாடுகளையே இன்று அச்சுறுத்தலில் ஆழ்த்தியுள்ள கொரோனா, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நாடு முழுவதும் இதுநாள்வரை மொத்தம் 550-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நேற்றைய நிலவரப்படி இவர்களில் ஒன்பது பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில், மதுரையை சேர்ந்த 54 வயது நபர் இன்று இறந்ததையடுத்து, கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரித்தது. இவரை தொடர்ந்து தற்போது, மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் இறந்துள்ளார். இதையடுத்து, இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.