கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 172 பேர் வீடு திரும்பினர்!

breaking
கிளிநொச்சி, இரணைமடு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தலுக்காக தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனனர். கடந்த 21ஆம் திகதி இந்தியாவிற்கு சுற்றுலா சென்று நாடு திரும்பியவர்களே இவ்வாறு இரணைமடு விமானப்படை முகாமில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். அவர்கள் குறித்த முகாமிற்கு அழைத்து வரப்பட்டு 14 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இன்று பரிசோதனைகள் இடம்பெற்றதையடுத்து விசேட பாதுகாப்பு மற்றும் வாகன வசதிகளுடன் அவ்வந்த பிரதேசங்களுக்கு இன்று (சனிக்கிழமை) அனுப்பிவைக்கப்பட்டனர். குறித்த அனுப்பிவைக்கும் நிகழ்வு இன்று காலை 8 மணியளவில் இரணைமடு விமானப்படை முகாமில் இடம்பெற்றதுடன் குறித்த அனைவரும் இந்தியாவில் கௌதம புத்தர் பிறந்த இடத்தினைப் பார்வையிட்டு வழிபடுவதற்காக சுற்றுலாப் பயணிகளாக சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.