இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்தார்!

breaking
இலங்கையில் கொரோனா வைரஸ் எனப்படும் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் ஒருவர் குணமடைந்துள்ளதான சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் இன்று காலை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கொரோனா எனப்படும் கொவிட் 19 தொற்றால் இதுவரை இலங்கையில் பதிவான 5 ஆவது மரணமாக இது அமைந்துள்ளதோடு, இலங்கையில் இதுவரை 159 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 25 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடதக்கது.