சுவிஸ் தமிழ் மக்களால் புத்துவெட்டுவான் பகுதிக்கு நிவாரண உதவி வழங்கல்

breaking

முல்லை மாவட்டம் புத்துவெட்டுவான் நிவாரண உதவி வழங்கல்

04.04.2020 திகதி சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் அனுசரணையுடன் முல்லை மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட புத்துவெட்டுவான், ஜயங்கன்குளம் , பழைய முறிகண்டி ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொருளாதார வறுமை மிக்க 255 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டது.

சுவிஸ் நாட்டில் வாழும் தமிழ் மக்களின் நிதி உதவியில் மேற்படி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

தாயகத்தில் கொறோனோ பரவல் தடுப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட தொழில் இன்மை காரணமாக பாதிக்கப்பட்டு உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழஙகும் பணி தொடர்ச்சியாக இம்பெற்று வருகின்றது. சுவிஸ நாட்டில் வாழும் தமிழ் மக்களின் நிதி உதவியுடன் வறுமையில் வசிக்கும் வறிய குடும்பங்களில் மோசமான நிலையிலுள்ள 255 குடும்பங்களுக்கு அத்தியாவசிப் பொருட்கள் அடகங்கிய உலர் உணவுப் பொதிகள் வழங்கப்ப்ட்டது.

தாயக மக்கள் மீது கரிசனை கொண்டு உதவிகளை வழங்கிய சுவிஸ்வாழ் தமிழ் உறவுகளுக்கு தாயக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.