பிரான்சில் தமிழ் குடும்பஸ்தர் காய்ச்சலினால் மரணம்!

breaking
பிரான்சில் ivry sur seine இல் கொரோனா தொற்றிற்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார் என முன்னர் தெரிவிக்கப்பட்டபோதும் அவர் சாதாரண காய்ச்சலினாலேயே பாதிக்கப்பட்டிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வட தமிழீழம் , யாழ். வசாவிளானைச் சேர்ந்த கந்தையா மகாதேவன் (வயது 61) அவர்கள் இன்று (05.04.2020) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பிரான்சில் அவரது இல்லத்தில் உயிரிழந்துள்ளார். காய்ச்சல் காரணமாக ஒரு வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகி வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது.