கப்டன் மருது உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

breaking
கப்டன் மருது உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 06.04.1996 அன்று யாழ். மாவட்டம் தவறுதலாக ஏற்பட்ட வெடிவிபத்தின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் மருது அவர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.   06.04.2007 அன்று திருமலை மாவட்டம் பாலையாற்றுப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் நீலவாணன் அவர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.   06.04.2007 அன்று மன்னார்மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் நீருந்து விசைப்படகு மூழ்கடிக்கப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் றெஜி அவர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். 06.04.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் தமிழ்முகிலன், லெப்டினன்ட் ஈழவன், லெப்டினன்ட் நிலவரசன், 2ம் லெப்டினன்ட் குணநிலா, வீரவேங்கை செந்தேவன் / சுடர்நிலவன், வீரவேங்கை வில்வன் ஆகிய வேங்கைகளின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.     தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”