06.04.2020 இன்று சுவிட்சர்லாந்து தமிழ்க்கல்விச்சேவையினரின் நிதிஅனுசரணையில் யாழ்மாவட்டத்தின் சங்காணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை மேற்கு, தொல்புரம்கிழக்கு, மூலாய் மேற்கு ஆகிய கிராமங்களில் கொவிற் 19 தொற்றுநோய் ஆபத்தினால் வீடுகளில் முடங்கியிருக்கும் 140 குடும்பங்களிற்கு அவர்களின் பசி தீர்க்கும் விதமாக 1650/= பெறுமதியான உலர் உணவு பொதிகள் எமது வெளிச்சம் நிறுவனத்தினால் வழங்கிவைக்கப்பட்டது.