ஊரடங்கு சட்டத்தை மீறி சட்ட விரோதமாக மதுபான தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் கைது!

breaking
ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தபட்ட வேளையில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறி சட்ட விரோதமாக மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட முன்று சந்தேக நபர்களை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா இன்ஞஸ்ரீ தோட்டப் பகுதியில் சட்டவிரோதமான மதுபானம் தயாரித்து மக்களுக்கு அதிகவிலையில் விற்பனை செய்துவரும் சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமைய நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரனவீர தலைமையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சட்டவிரோத மதுபானம் தயாரிப்பிற்கு பயன்படுத்தபட்ட உபகரனங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் டிக்கோயா புளியாவத்தை இன்ஞஸ்ரீ தோட்டபகுதியை சேர்ந்தவர்கள் எனவும் சந்தேக நபர்கள் மூன்று பேரையும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகன்றமை குறிப்பிடதக்கது.