இலங்கையில் அதிகரிக்கும் கொரொனா நோயாளிகளின் எண்ணிக்கை

breaking
  இலங்கையில் இன்று (07.04.2020) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 185 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில், தற்போது வைத்தியசாலையில் 137பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை கொரோனா தொற்றினால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான 42 பேர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.