சிறிலங்காவில் கொரொனா தொற்றால் 7 ஆவது நபர் உயிரிழப்பு

breaking
இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார் என்பதோடு இலங்கையில் உயிரிழந்த 7 ஆவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.   இந்நிலையில் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவரக்ளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.   இந்நிலையில் உறுதிபடுத்தப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 188 ஆகவும், சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை 140 ஆகவும்,புதிய நோயாளர்களின் எண்ணிக்கை 3 ஆகவும் காணப்படுவதோடு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக காணப்படுகின்றது.