வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:
கொரோனா வைரஸ் பரவுவதற்கு சீனாவே காரணம் அந்த வைரஸ் பாதிப்பு குறித்து முன்கூட்டியே சீனா தெரிவித்து இருந்தால் உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகளை தடுத்து இருக்கலாம். சீனா செய்த தவறுக்கு தற்போது உலகம் பெரும் விலையை கொடுத்து கொண்டிருக்கிறது.
கொரோனா பற்றிய உண்மையான தகவல்களை வெளியிடாததால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொடர்பான தகவலை சீனா மறைத்துள்ளது