வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம்! கொரோனாவா என சந்தேகம்

breaking
சிறிலங்காவில்  தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும், சில உயிரிழப்புக்கள் பொது மக்களிடையே கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையடுத்து விழிப்புடன் இருக்குமாறு அரசாங்கம் மக்களிடையே கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையில், கொழும்பு கல்கிஸ்ஸ பகுதியில் வாகனம் ஒன்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து கல்கிஸ்ஸ – சேரம் வீதியில் மேற்படி சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் கொரோனா வைரஸினால் உயிரிழந்திருப்பாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.