தாயக மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கிய யேர்மன் வாழ் மக்கள்

breaking

தாயகத்தில் கொரோனா வையிரஸ் தாக்கம் காரணமாக அன்றாடம் வேலைசெய்து வாழும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது யாவரும் அறிந்த விடயமே. அவர்களின் பசி போக்கும் சிறு துளியாக 09.04.2020 இன்று ஜேர்மன் வாழ் புலம்பெயர் மக்களின் நிதிப்பங்களிப்புடன் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மைல்குஞ்சன் குடியிருப்பில் 51 பேருக்கும், திம்பிலிக் கிராமத்தில் 21 பேருக்கும் உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.