குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை மேலும் தாமதிக்க வேண்டாம்!

breaking
குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் வேலைத்திட்டத்தை காலம் தாழ்த்தாது உடனடியாக செயற்படுத்தப்பட வேண்டுமென, அரசு குடும்ப நல சுகாதார சேவை அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவுவதையடுத்து, தடுப்பூசி போடும் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளன. எனினும், மேலும் தாமதித்தால் பாரிய விளைவுகள் எதிர்காலத்தில் எற்படுமென, குறித்த சங்கம் எச்சரித்துள்ளது. வீடுகளுக்குச் சென்று குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை போடும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு, சங்கத்தின் தவிசாளர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.