அம்பாறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: திருக்கோவில் பிரதேசத்தில் உட் செல்ல வெளிச்செல்ல தடை

breaking
  அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பகுதிகளுக்குள் வெளி பிரதேசத்தில் இருந்து உடசெல்லவோ அங்கிருந்து இருந்து வெளி பிரதேசத்திற்கு பொது மக்கள் செல்லவோ இன்று (11.04.2020) முதல் இருந்து மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர். ஆர் டபிள்யூ .கமல்ராஜ் தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்று நோயாளர் ஒருவர் கண்டு பிடிக்கப்பட்டார். இதனையடுத்து திருக்கோவில் பிரதேச செயலாளர், பிரதேசசபை தவிசாளர் பிரதேச சுகாதார பணிப்பாளர் பொதுசுகாதார உத்தியோகத்தர், பொலிசார் மற்றும் இராணுவத்தினர் கலந்துகொண்டு இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதேசத்தில் நோய் தொற்றை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது சமூக இடைவெளிளை பேணுவதற்காக பிரதேசத்தின் பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டு விநாயகபுரம் பொதுசந்தையிலும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மைதானத்திலும், தம்பிலுவில் பொது சந்தை பகுதியில் நிரந்தரமாக உள்ள அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் என மூன்று பிரதேசங்களில் சந்தை வியாபார நடவடிக்கை இடம்பெறவுள்ளதுடன் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்களான பலசரக்கு கடைகள், மருந்தகங்கள், பழக்கடைகள், போன்றவை தவிர ஏனைய கடைகள் மறு அறிவித்தல் வரை திறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சந்தைகளில் அந்த பிரதேச மக்கள் பொருட்களை கொள்வனவு செய்யவேண்டும் எனைய பிரதேச சந்தைகளுக்கு சென்று பொருட்கள் கொள்வனவு செய்ய தடை விதிப்பு,திருக்கோவில் பிரதேசத்திற்கு உள்நுளையும் வீதிகளான தாண்டியடி சாகாமம், மற்றும் அக்கரைப்பற்று பிரதேச எல்லை பகுதிகளில் இராணுவ, பொலிஸ் வீதி சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு திருக்கோவில் பிரதேசத்திற்குள் ஏனைய பிரதேச மக்கள் உட்செல்லவே அங்கிருந்து வெளி பிரதேசத்துக்கு செல்லவே முடியாதவாறு சோதனை நடவடிக்கை இடம்பெறும் அதேவேளை சேபாதனைச் சாவடியில் வைத்து அங்கு வருவபர்களுக்கு மேல் தொற்று நீக்கி வீசப்படும் . இதேவேளை பொது மக்கள் சமூக இடைவெளியை பேணுவதற்கா பொலிசார் மற்றும் இராணுவத்தினருடன் விளையாட்டு கழகங்களுடைய இளைஞர்கள் ஈடுபட்வுள்ளதுடன் இந்த நோய் தொற்றை தடுப்பதற்கு பொதுமக்கள் கூடும் இடங்களில் தொற்று நீக்கி தொடர்ச்சியாக தெளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இந்த தொற்று நோயை தடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதேச சபை தவிசாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.