அறுவைச் சிகிச்சைக்குட்பட்ட மாணவனுக்கு கொரொனா: வைத்தியர்கள் உட்பட்ட 20 பேர் தனிமைப்படுத்தலில்

breaking
  நாகையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பள்ளி மாணவனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், சிகிச்சை செய்த மருத்துவர்கள் உட்பட 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு அப்பன்டிஸ் அறுவை சிகிச்சை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் நடந்துள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின் மாணவனுக்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்படவே ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன அதில் மாணவனுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இதனைத்தொடர்ந்து மாணவனுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது