வீடில்லாமல் கைக்குழந்தைகளுடன் அவதியுறும் மக்களுக்கு கொஞ்சம் கருணை காட்டுங்கள்!

breaking
உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்றும் அதன் பாதுகாப்புக்கும் என சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட ஊரடங்கு சட்ட நடைமுறை எமது நாட்டில் கொரோனா தொற்று பரவலை பாரிய அளவு குறைத்தது என்பது உண்மையே ஆனாலும் இவ்வாறான சட்ட நடைமுறைகள் வறுமையையும் பசியையும் குறைக்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஊரடங்கு நடைமுறை இலங்கையில் நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரத்தையே முற்றாக கேள்விக்குறியாக்கிய நிலையில் நாளாந்த கூலித்தொழிலில் ஈடுபடும் வறுமை கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களின் நிலையை எவ்வாறு மாற்றி அமைத்திருக்கும் என்பதை கற்பனையில் காணும் போதே கண்ணீர் சிந்தும். ஆனாலும் அவ்வாறான நிலையிலும் ஒரு வேளை உணவிருந்தாலே போதும் என்ற மன நிறைவுடன் ஊரடங்கு நிலையை கடந்த குடும்பங்கள் இவை. இந்த குடும்பங்கள் எவையும் ஆபிரிக்க கண்டத்தை சேர்ந்தவர்கள் இல்லை மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட அருகம் குன்று பகுதியை சேர்ந்தவர்களே இவர்கள் வறுமை இவர்களுக்கு பழக்கமே. வறுமையிலும் உழைத்து உயிர் வாழ்ந்தாலும் இந்த ஊரடங்கு இவர்கள் வாழ்கையை உலுக்கி போட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள அனேகமான குடும்பங்கள் கூலிதொழில் செய்து வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துகின்றனர். ஊராடங்கு சட்டம் காரணமாக இவர்களால் கூலி தொழிலிற்கும் செல்ல முடியவில்லை. எம்மவர்களின் சமையல் அறை போன்றுதான் அவர்களின் வீடு ஓட்டைகள் நிறைந்த ஓலை குடிசை, புகையால் நிறைந்த சமையல் அறை, தாயின் பாலுக்காய் காத்திருக்கும் கை குழந்தை, காலை உணவுக்காக காத்திருக்கும் மற்ற குழந்தைகள் என சொல்லனா துன்பங்களை அனுபவித்து வருகின்றது இவ் குடும்பங்கள் ஒழுங்கான வீடு இல்லை நீர் வசதி இல்லை தொடர்ந்து செய்ய தொழில் இல்லை. தமக்கு என ஒரு தற்காலிக வாழிடங்களையாவது அமைத்து தாருங்கள் என கோருகின்றனர் இப் பகுதி மக்கள். வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் இருந்தும் கழிப்பறை வசதி இன்றி காடுகளுக்கு செல்லும் நிலை இவர்களுகான தற்காலிக ஏற்பாட்டையாவது அரச அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் அல்லவா எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக குறித்த மக்களின் அடிப்படை தேவைகளையாவது நிறை வேற்றி வழங்குமாறு குறித்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் பொது மக்களே வீணாக செலவு செய்யும் பணத்தையோ நேரத்தையோ இவர்களுக்கும் சிறிய அளவிலாவது செலவு செய்யுங்கள் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.