வடமராட்சியில் சிறிலங்கா காவல்துறையினர் மீது கிளைமோர் தாக்குதல் பிரதேசத்தில் பதட்டமான சூழ்நிலை

breaking
  யாழ்.வடமராட்சி- வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அண்மையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது கிளைமோர் தாக்குதுல் நடாத்தப்பட்டிருக்கின்றது. குறித்த தாக்குதலில் பொலிஸார் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களால் பொலிஸாரை இலக்குவைத்து இந்த கிளைமோர் தாக்குதல் நடாத்தப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியிருக்கின்றார். இந்த கிளைமோர் தாக்குதல் இன்று காலை 7.30 மணிக்கு நடாத்தப்பட்டுள்ளது. சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் படையினர், பொலிஸார் குவிக்கப்பட்டு பதற்றமான நிலை நீடித்து வருகின்றது.