யாழ். மீசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

breaking
  யாழ்.தென்மராட்சி – மீசாலை வடக்கு வேம்பிராய் பிரதேசத்தில் அமைந்துள்ள கள்ளுத் தவறணைக்கு அருகாமையிலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக இன்று காலையில் மீட்க்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி கெருடாவில் பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய குடும்பஸ்தரான இரத்தினம் கந்தசாமி என்ற குடும்பஸ்தரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் இவரிடமிருந்து பிரிந்து வவுனியாவில் வாழ்ந்து வருவதாகவும், இவர் கெருடாவிலிலுள்ள தனது சகோதரியின் வீட்டில் வசித்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டவர் வீடு திரும்பாத நிலையில், தவறணைக்கு வருபவர்கள் தகவல் வழங்கியதையடுத்து இன்று காலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.