சிறிலங்காவில் இன்றும் 100 ஐ கடந்த கொரொனா தொற்றாளர்கள்

breaking
நாட்டில் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 53 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதுவரை மொத்தமாக 1,425 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் இரவு 8.00 மணிவரையான காலப்பகுதியில் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளான 106 பேர் இனங்காணப்பட்டனர். இன்று இனங்காணப்பட்ட 106 நோயாளர்களில் 53 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தோர் எனவும், 53 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கடற்படையினர் எனவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 732 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 683பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். 75 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.thaarakam.com/news/133694