வைத்தியசாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் ஐந்து கொரோனா நோயாளிகள் பலி!

breaking
பங்களாதேஷில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் 5 நோயாளிகள் உயிரிழந்துள்ளார்கள். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தீப் பரவலை தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணிநேர போராட்டத்தின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் பிரிவில் இருந்து ஐந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் நான்கு ஆண்களும் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.