05.06.2000 அன்று முல்லைத்தீவு மாவட்டம் சுண்டிக்குளம் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் இரண்டு அதிவேக டோறா பீரங்கிக் காலங்கள் மூழ்கடிக்கப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலி லெப். கேணல் ஆண்டான் உட்பட ஏனைய மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
05.06.2000 அன்று ஆழ்கடல் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்ட படகுகளுக்கு பாதுகாப்பு வழங்கி அவ்விநியோகப்படகுகள் தளம் திரும்பிய பின்னர் சண்டைப்படகுகள் தத்தம் தளம் திரும்பிக் கொண்டிருந்த வேளையில் லெப் கேணல் ஆண்டான் தலைமையிலான சண்டைப்படகுத் தொகுதி மீது இலங்கைக் கடற்படையினரின் டோறாப்படகுகள் வழிமறித்துத் தாக்குதல் நடாத்த முற்பட்டவேளை அம்மறிப்புத் தாக்குதலை தமக்குச் சாதகமாகப் பயண்படுத்தியும் சிறப்புத் தளபதி சூசை அவர்களின் ஆலோசனையுடனும் லெப் கேணல் ஆண்டான் மறிப்புச் சமரை நடாத்திக் கொண்டிருக்க