ஓமானில் சிக்கியிருந்த பலர் இலங்கை திரும்பினர்

breaking
கொரோனா  பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு கட்டம் கட்டமாக அழைத்து வரப்படுகின்றனர். அதற்கமைய தாயகம் திரும்ப முடியாது ஓமான் நாட்டில் சிக்கித் தவித்த 288 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்கள் விசேட விமானத்தின் மூலம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர். இதனையடுத்து அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவர்களை விமான நிலையத்திற்கு அண்மையில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஹொங்கொங்கிலிருந்து நேற்று இரவு 26 பேர் தாயகம் திரும்பியுள்ளதுடன், அவர்களும் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளுக்காக ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.