விடுதலை புலிகளின் ஆதரவாளர்களை தீவிரமாக கண்காணிக்கும் சிங்கள அரசு

breaking
தமிழீழ விடுதலை புலிகளின் அனுதாபிகளும், ஆதரவாளர்களும் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பதாக கூறியிருக்கும்   இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா, அவர்கள் தொடர்பில் மிக அவதானமாக இருக்கிறோம். இருக்கவேண்டியிருக்கிறது. எனவும் கூறியுள்ளார். சிங்கள  ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,  விடுதலைப்புலிகளை முற்றாக தோற்கடித்து துடைத்தெறிந்துள்ளோம். ஆனால் அவர்களின் ஆதரவாளர்களும் அனுதாபிகளும் இன்னமும் செயற்படுகின்றனர். வெளிநாடுகளில் நிதிசேகரிப்பில் ஈடுபடுகின்றனர். என சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். அந்த நாடுகளில் வாழ்ந்து கொண்டு அவர்கள் இதனை தொடர விரும்புகின்றனர், அவர்கள் விடுதலைப்புலிகளிற்கு ஒக்சிசனை வழங்கமுயல்கின்றனர்.