ஒரே நாளில் 75 கள்ள வாக்குகள் போட்ட சிறிதரன்

breaking
 ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தான் அந்த காலத்தில் ஒரே நாளில் 75 கள்ள வாக்குகள் போட்டதாக கூறிய சிறிதரன் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.மேலும் இது பற்றிய கூறிய அவர்,செத்தவர்கள் எல்லாம் வாக்கு போட்ட காலம் அது என்று ஆனந்தசங்கரியர் சொல்லுவார் என்று குறிப்பிட்டு காட்டினார்.மேலும் இதை பற்றி கிளறினால் கடந்த காலத்தில் ஏற்பட்ட பல கசப்பான சம்பவங்கள் வெளிவரும் என்றும் சிறிதரன் குறிப்பிட்டார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்,கடந்த தேர்தலில் அதிகபடியான விருப்பு வாக்குகளை பெற்ற சிறிதரன் அண்மை காலங்களில் கூறி வரும் கருத்துக்கள் மக்கள் மத்தியில் ஏளனமாக பார்க்கப்படுகின்றது.அதிக வாக்குகள் பெற்ற ஆணவமா? இல்லை அரசியல் பற்றிய அறியாமையா? இல்லை மக்கள் பற்றிய ஏளனமா? எதை சொன்னாலும் கிளிநொச்சி பிரதேசவாதம் மையப்படுத்தி வாக்குகளை மக்கள் தனக்கு அளிப்பார்கள் என்ற கர்வமா? சரியான வாக்குகளை ஏமாற்றி வெல்ல சரியான போட்டி இல்லை என்ற எண்ணமா? எதுவாக இருந்தாலும் ஒரு உங்களின் ஒவ்வொரு சொற்களும் உங்களை காட்டி தொடர்ந்து கொடுக்கின்றன.ஒரு நாள் ரோட்டில் சந்திப்போம்.சரி போன முறை எத்தனை கள்ள ஓட்டுக்கள் போட்டீர்கள்? இந்த முறை எத்தனை போட போகிறீர்கள்? ஆடிய காலும் கள்ள ஓட்டு போட்ட கையும் சும்மா இருக்குமா?