TID யினரால்  கேப்பாப்பிலவு இளைஞன் கைது

breaking
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராமத்தில் பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினரால் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாதத்தினை ஊக்கிவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கேப்பாபிலவு பகுதியினை சேர்ந்த நவரத்தினம் டிலக்சன் என்ற 25 அகவையுடைய விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று 29.06.2020 இரவு இவர் கைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இவரது வீட்டிற்கு சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினர் இவரை கைதுசெய்வதற்கான ஆவணத்தினை வழங்கிவிட்டு கைதுசெய்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளார்கள்.