சிறிலங்காவில் மேலும் கொரொனா தொற்று நோயாளர்கள்

breaking
  சிறிலங்காவில் இன்றைய தினம் புதிதாக வைரஸ் தொற்றுக்குள்ளான 05 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு,கொரோனா தொற்றுக்குள்ளான ஐந்து நோயாளர்களும் ஓமானிலிருந்து நாடு திரும்பியவர்களாவர். இதற்கமைய சிறிலங்காவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,047 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,711 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், கொரோனா தொற்று நோயாளிகளில் 325 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். இதேவேளை, 49 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.