தமிழ் அரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் விமலேஸ்வரி மீது ஒழுக்காற்று நடவடிக்கை – மாவை
பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாகிய சுமந்திரன் மற்றும் சிறீதரன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்ட தமிழ் அரசுக் கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணி செயலாளர் விமலேஸ்வரி சிறிகாந்தரூபன் மற்றும் நால்வர் வெளியிட்ட விமர்சனமானது, தமிழ் அரசுக் கட்சிக்கும், வேட்பாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சி தலைமைக்கு தெரிவிக்காமல் இத்தகைய செய்தியினை வெளியிட்டிருந்தமைக்கு எதிராக, சம்மந்தப்பட்டவர்கள் மீது கட்சி தலைமை உடனடியாக அவர்களை கட்சியில் இருந்து நீக்கி அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை உடனடியாக எடுக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் அவர்களுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.