39 பெரல் மதுபானத்துடன் குவைத்தில் இலங்கையர் கைது

breaking
குவைத்தில் 39 பெரல் மதுபானத்துடன் இலங்கையர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இரவு ரோந்து கடமையில் ஈடுபடுபட்ட பாதுகாப்பு படையினரை கண்டு ஒரு நபர் தான்கொண்டுவந்த பையை எறிந்துவிட்டு கட்டடம் ஒன்றுக்குள் ஓடியதாகவும் அரபு டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, குறித்தகட்டடத்திற்குள் நுழைய அனுமதி பெற்றபடையினர் அங்குசென்று இலங்கையரை கைது செய்தனர். அத்துடன்மதுபானம்தயாரிக்கும் உற்பத்தி கருவிகள் மற்றும் உபகரணங்களுடன் 39 பெரல் மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டதாக அரபு டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.