மக்களை பலிக்கடாக்கள் ஆக்க தயாராகும் கூட்டமைப்பு!

breaking
சிறிலங்கா பாராளுமன்ற தேர்தல் தமிழீழ தாயக பிரதேசமெங்கும் கலைகட்ட ஆரம்பித்திருக்கிறது வழமை போல சிறிலங்காவின் தென்னிலங்கை கட்சிகளும் மக்களின் வாக்குகளை களவெடுக்க தமிழீழ பிரதேசம் நோக்கி படையெடுத்துக்கொண்டிருக்க. தமிழீழ தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு என் கூறி தமிழ் மக்களின் வாக்குகளையே எடுத்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடகுவைப்பக்கும் செயற்பாட்டில் கூட்டமைப்பு செயற்படப்போகிறது என்பது மக்கள் அனைவரும் அறிவர். மிகக்குறிப்பாக தமிழீழத் தேசியத்தலைவரால் உருவாகிய கூட்டமைப்பின் உறுப்பினர் யாவரும் கூட்டமைப்பின் கொள்கைபிறள்வால் வெளியேறி விட. 2009ற்கு பின் பின்கதவால் வந்தவர்களும் சிங்கள அரசின் அடிவருடிகளால் களமிறக்கப்பட்டவர்களும் என துரோகிகளின் கூடாரமாக மாறிப்போன தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிப்பது என்பது.  இந்த மண்ணுக்கா செய்யப்பட்ட அத்தனை தியாகங்கக்கும் செய்யும் அளப்பெரிய தூரோகம் என்பதை தமிழ்மக்கள் உணர்வர்.